மும்பையில் திருமணம் செய்து அங்கேயே குடியேறும் ஆர்வத்தில் இருக்கிறார் நயன்தாரா.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகை நயன்தாராவுக்கும், இயக்குநர் பிரபு தேவாவுக்கும் இடையே காதல் மலர்ந்த செய்தி அனைவருக்கும் தெரியும்.
இடைக்காலத்தில் அவர்களுக்கு மத்தியில் விவாதங்கள் ஏற்பட்டதாகவும், புரிந்துணர்வு இல்லாமையாலும் காதல் பின்வாங்கியதாக செய்திகள் வெளியாகின.
இதைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், நாங்கள் ஒற்றுமையுடன் இருப்பதாக நயன்தாரா அறிவித்தார்.
தற்பொழுது நயன்தாரா கூறியதாவது, எனக்கும், பிரபுவுக்கும் அடுத்த வருடம் சனவரியில் திருமணம் நடக்கும்.
திருமணத்தைத் தொடர்ந்து மும்பையில் குடியேறப் போவதாகவும், தற்பொழுது அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருவதாகவும் நயன்தாரா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment