Friday 14 October 2011

ராணா படத்தை அஜீத்தை முன் வைத்து.... (TFC)

ரஜினிக்கு அஜீத் மீது எப்போதுமே ஒரு தனி கவனம் உண்டு. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் படவுலகம் அறிந்த செய்திதான். ஆனால் சமீபகாலமாக தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பெரும் பொறுப்பு ஒன்றை அஜீத்தையும் சேர்த்து சுமக்க வைக்க ஆசைப்படுகிறாராம் ரஜினி. கோடம்பாக்கத்தில் பரவலாக பேசப்படும் இந்த விஷயத்திலிருக்கும் உண்மையின் அளவு போக போகதான் தெரியும் போலிருக்கிறது. ஆனால் பேசப்படுவது இதுதான்.

ராணா படப்பிடிப்பு தள்ளிக் கொண்டே போவதில் ரஜினிக்கும் பெரிய வருத்தம் இருக்கிறதாம். எனவே இந்த படத்தை அஜீத்தை முன் வைத்து துவங்கினால் என்ன என்று கருதுகிறாராம். ஒரு கேரக்டரில் தானும் கவுரவ வேடத்தில் தோன்றினால் போச்சு என்பதும் அவரது திட்டமாக இருக்கிறதாம். இதற்கு படத்தை தயாரிக்கும் மும்பை நிறுவனமும் முழு சம்மதத்தை தெரிவித்திருக்கிறதாம். இவையெல்லாம் நடக்குமா, அல்லது வெறும் வதந்தியளவிலேயே நிற்குமா என்பதை காலம்தான் நிருபிக்க வேண்டும்.

No comments:

Post a Comment