Sunday 6 November 2011

இணையத்தளங்களுக்கு எதிரான அரச சட்டத்தால் இணைய உலகில் பரபரப்பு (TFC)


அரசாங்கத் தகவல் திணைக்களம் இன்று இணையத்தளங்களுக்காக வெளியிடப்பட்டுள்ள செய்தி இணைய உலகில் சற்றுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது இலங்கை தொடர்பாகவும் இலங்கையவர்கள் தொடர்பாகவும் செய்திகளை வெளியிடும் தளங்கள் அனைத்தும் அரச தகவல் திணைக்களத்தில் பதிவு செய்யப்படவேண்டும்.
அத்துடன் இச்சட்டமானது இலங்கையில் இயங்கும் தளங்களுக்கு மட்டுமல்லாது வேற்று நாடுகளில் இயங்கும் அத்தனை தளங்களுக்கும் பொருத்தமானது ஆகும்.
அதுமட்டுமல்லாமல் அரச தலைவர் சம்பந்தமாகவும் மற்றும் அரசு சம்பந்தப்பட்டவர்கள் சார்பாகவும் வெளியிடப்படும் செய்தியானது அரசு அனுமதி பெற்றே வெளியிடப்பட வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment