Sunday 6 November 2011

மும்பையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 119 பெண்கள் மீட்பு (TFC)


மும்பை மத்திய பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 119 பெண்கள் பொலிசாரால் மீட்கப்பட்டனர்.
கிராண்ட் ரோடில் கடந்த புதன்கிழமை இரவு 12 மணிக்கு பொலிசார் நடத்திய சோதனையின்போது அங்கு உள்ள கட்டிடம் ஒன்றில் மூன்று தளங்களில் இயங்கி வந்த 13 விடுதிகள் அடையாளம் காணப்பட்டன.
இவ்வாறூ 119 பெண்கள் ஒரே தடவையில் மீட்கப்பட்டது இதுவே முதல்முறை என்றூ அமுலாக்கப்பிரிவி துணை ஆணையர் பி.ஜி.சேகர் கூறியுள்ளார்.
மேலும் இவர்களில் நான்கைந்துபேர் 18 வயதை அடையாத சிறுமிகளாக இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காவல்துறை 30 பேரை கைது செய்துள்ளது. அவர்கைளில் விபச்சார விடுதி நடத்திய வந்த 14 பெண்களும், தரர்களாக செயல்பட்ட 16 ஆண்களும் அடங்குவர்.

No comments:

Post a Comment