முன்பெல்லாம் எந்த திரைப்பட நிகழ்ச்சி நடந்தாலும் வருகிறார்களோ, இல்லையோ. தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பெயரை அழைப்பிதழில் போடுவது வழக்கம். ஆனால் சமீபத்தில் துவங்கப்பட்ட ராணா பட விழாவுக்கு தயாரிப்பாளர் சங்க தலைவர்கள் சிலரை அழைக்கவே இல்லையாம் ரஜினி.
அதுமட்டுமல்ல, அவர்களுக்கு பிடிக்காத கே.ஆர்.ஜி., கே.ஆர் ஆகிய இருவரையும் விழாவுக்கு அழைத்திருந்தாராம். இது ஒருபுறம் நிருபர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இன்னொரு புறம் இதே வேலையை செய்திருக்கிறார் ஓம் என்ற படத்தை தயாரித்து வரும் ஷக்தி சிதம்பரம்.
இவர் சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் துவக்க விழாவை ஜோராக நடத்தினார். அழைப்பிதழில் இவரும் குறிப்பிட்ட முக்கியஸ்தர்களின் பெயரை போடவில்லை. நேரிலும் வரச்சொல்லி அழைக்கவில்லை. தேர்தல் முடிவு தெரிகிற வரைக்கும் இந்த இழுபறி தொடர்வது சகஜம்தான்.