ரஜினியின் உடல் நிலையில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. சிகிச்சைக்காக அவர் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடும் என்று பேச்சிருந்தாலும், அதற்கு அவசியம் இல்லை என்று தடுத்து நிறுத்தியிருக்கிறார்களாம் மருத்துவர்கள்.
இதற்கிடையில், நேற்று இரவு சுமார் 11 மணியளவில் ரஜினியின் கார் சென்னையிலுள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு வந்தது. கால்கள் வீங்கிய நிலையில் காணப்பட்டாராம் அவர். மூச்சு திணறலும் இருந்தது. இதையடுத்து அங்கு அனுமதிக்கப்பட்ட ரஜினிக்கு பல்வேறு சிகிச்சைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த செய்தியை மிக ரகசியமாகவே வைத்திருக்க விரும்புகிறது மருத்துவமனை. காரணம் ரஜினி ரசிகர்கள் அங்கே திரண்டு வந்து நின்றால் என்னாவது என்ற அச்சத்தினால்தானாம். இது குறித்து போன் செய்யும் நிருபர்களிடம் கூட இங்கு ரஜினி சார் இல்லையே.
அவர் வீட்டுக்கு போயிட்டாரே என்றே பதில் சொல்கிறார்கள். ரஜினியே தனக்கு ஒன்றுமில்லை என்று பேட்டி கொடுக்கிற வரைக்கும் பரபரப்பு ஓயாது போலிருக்கிறது.